தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் - அஜித் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே ரசிகர்களிடையே இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - அஜித் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் இணையும் படம் பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைம்பாளர் கங்கை அமரனின் மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் இயகத்திலேயே இருவரும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் - அஜித் இருவரும் 1995ம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் இருவரும் இணைந்து நடித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.